சனி, 3 மே, 2014

புத்தர் சிந்தனைகள் :-

புத்தர் சிந்தனைகள் :-
* அடக்கமில்லாமல் நூறாண்டு வாழ்வதை காட்டிலும் ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வு சிறப்பானது.
* கோபத்தை அடக்கி மனம் என்னும் கடிவாளத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
* கடினமான பாறை புயலைக் கண்டு கலங்காதது போல புகழ், இகழ் ஆகிய இரண்டையும் கண்டு அறிஞர்களின் மனம் கலங்குவதில்லை.
* பகையைப் பகையால் தணிக்க முடிவதில்லை. அன்பால் மட்டுமே பகை தீரும்.
* மனதை அன்பு, அருளால் நிரப்புங்கள். பிறருக்கு உதவி செய்ய முயலுங்கள். ஆனால், தீமை செய்ய மனதாலும் நினைக்காதீர்கள்.
* அன்பு வாழ்வே சிறந்த வாழ்வு. அன்பிருக்கும் இடம் தேடி அமைதி தானாகவே வந்து விடும்.
* எந்த விஷயத்தையும் யார் கூறுகிறார் என்பதை விட, என்ன கூறுகிறார் என்பதே முக்கியமானது.
* தூய எண்ணத்துடன் பேசும்போதும், செயல்படும்போதும் மகிழ்ச்சி நிழல் போல நம்மைத் தொடர்கிறது.
- புத்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக