புதன், 26 ஆகஸ்ட், 2015

குறைகளை நிவர்த்தி செய்யும் அற்புதமான ஸ்தலங்கள்




குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள்திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.

==================================================கோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.
================================ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின் குருவாக இருப்பவர் காலபைரவர்!!!

காலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன. அதில் ஒன்று, ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்டமிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
==========================================

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.

===========================================

திண்டுக்கல் மாவட்டம்,தாடிக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது. இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமணசம்மந்தம் கிடைக்கும்.

இங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை, கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் என்பது ஐதீகம.
==================================================
நவ பிருந்தாவன் - ஒரு முறை சென்று வாருங்கள். தினமும், நவ பிருந்தாவன் படத்திற்கு முன், நெய் தீபம் ஏற்றுங்கள்.. பொருளாதார ஏற்றம், உங்கள் வாழ்வில் நிச்சயம் உண்டு...

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பஞ்சகவ்ய ரகசியங்கள்



பஞ்சகவ்ய ரகசியங்கள் (share) செய்யுங்கள்)

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய 

ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. 

குணமுடையன இவற்றின் கலவை சிறந்த 

சத்துணவு . கோசலமும்(கோமியம்) , 

கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் 

குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் 

கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என 

பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 

மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 

4) நெய் 5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து 

தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து 

சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை 

பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், 

வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் 

பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு 

விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். 

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் 

பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல 

மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது 

கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி

பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி

பசும்நெய்:மோட்சம்

கோசலம் :தீட்டு நீக்கம்

கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் 

நிறையும்.கருவறைகளில் பிரதிஷ்டை 

செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் 

குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான 

கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை 

எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் 

காரணமாககருவறைகள் , சிலைகள், 

இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் 

கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் 

வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை 

அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு 

அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் 

பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக 

மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் 

சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த 

சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் 

சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் 

அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு 

அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல்

அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் 

தன்மை கொண்டவை, என்றென்றும் 

புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை 

முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று 

விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு 

சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் 

உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு 

தேவர்கள் வாசம் செய்கின்றனர். பசுவின் 

பால்,தயிர், நெய். கோமயம், சாணம் னும் 

இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் 

எனப்படும்

இது இயற்கை வேளாண்மையில் மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் 

பொருள்(உரம்) ஆகும்.

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில 

அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு

பசுந்தயிர் :2 அளவு

பசும்நெய் அளவு

கோசலம் :1 அளவு

கோமயம் : 1 அளவு

தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் 

முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது .

பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட 

பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் 

அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் 

தொடர்வு உண்டு.

பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும்

நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,

கருநிறப் பசுவிடமிறந்து நெயும் ,

செந்நிற பசுவிடமிருந்து கோசலமும்,

தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க 

வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் 

பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில் 

"ஆனைந்த "என்பர் .

பசும் பாலில் சந்திரனும் ,

பசுவின் தயிரில் வாயு பகவானும்,

கோமயத்தில் வருண பகவானும்,

பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,

நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை



ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை



நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை - ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க , உங்களுக்கு தேவையான ஆன்ம பலம் அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ கால பைரவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம்

அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு வெளிச்சத்திற்கு கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும்.

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?
பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.

சனி, 11 ஜூலை, 2015

வராகி வழிபாடு

வராகி வழிபாடு செய்யத் தேவையான தகுதிகள். . .
அஷ்டபைரவர்களில் புதன் பகவானின் பிராண தேவதை உன்மத்த பைரவர்;இவரது துணைசக்தியே வராகி! பன்றி முகத்துடன் கூடிய பெண் சக்தி!
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை என்பது வாலை என்ற பெண்தெய்வ சக்தியை தரிசிப்பதுதான்! சாதாரண மனிதர்களாகிய நாம் வாலையை தரிசிக்க பல பிறவிகள் தொடர்ந்து ஆன்மீக முயற்சிகள் எடுத்தால் தரிசிக்கலாம்;
வாலை என்பது யார்?
மனிதர்களாகிய நம்மைக் கட்டுப்படுத்துவது நவக்கிரக நாயகர்கள்! (சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது பேர்கள்)
இந்த நவக்கிரக நாயகர்களை சூட்சுமமாக இயக்குவது பஞ்சபூதங்கள்:
இந்த பஞ்சபூதங்கள் மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்(சிவன் அல்ல;) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன;
இந்த மும்மூர்த்திகளும் மஹாபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறார்கள்;மஹாபைரவரோ ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறார்;உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள் சக்திகள் அனைத்தும்,அனைத்துச் செயல்களும் இங்கிருந்து இயங்குகின்றன;
இதற்கு மேல் இருக்கும் சக்திகளைப் பற்றி அறிய நாம் சித்தரானால் மட்டுமே முடியும்;
இவர்களுக்கு மேலே ஐந்து சிவ சக்திகள் இருக்கின்றன;இவர்களுக்கும் மேல் அண்ணாமலையார் இருக்கிறார்;அவரையும் இயக்குவது வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி என்ற ஆதி சக்தி என்ற ஆதி பரபிரும்ம சக்தி!
இந்த வாலையை தரிசிப்பதே மனிதப் பிறப்பின் நோக்கம்;சித்தராக ஆக விரும்பும் போதுதான் வாலை தரிசனத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்;வாலையை தரிசிக்க விரும்புவோர்,முதலில் வராகியைத் தரிசித்து ஆசியும்,வரங்களும் வாங்க வேண்டும்;
வராகியைத் தரிசிக்க தினசரி 20 நிமிடம் வீதம் இரண்டு ஆண்டுகள் வராகி உபாசனை செய்ய வேண்டும்;வராகி உபாசனை செய்ய விரும்புவோர் அசைவம் சாப்பிடக் கூடாது;பிறருக்கு தீங்கு நினைக்கவே கூடாது;இந்த இரண்டு கொள்கைகள் யாருக்கு இயல்பான சுபாவமாக இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே வராகி உபாசனை கைகூடும்;
தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! இணையத்தில் வராகி வழிபாடு பற்றி எழுதுவதே தப்புதான்;ஏன் எனில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நேரடியாக உபதேசிக்க வேண்டிய வழிபாடு வராகி வழிபாடு! அவரவர் பிறந்த ஜாதகப்படி தான் ஒருவருக்கு வராகி உபாசனைக்குரிய தகுதி இருக்கிறதா? என்பதை மதிப்பிட முடியும்;இது வெட்டி பில்ட் அப் அல்ல;யதார்த்தம்.
உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை வராகி.வராகியைப் பற்றி தமிழ்நாடு முழுக்க பலருக்குத் தெரிந்திருக்கிறது;பல ஆன்மீக அமைப்புகள் வராகி உபாசனையைச் சொல்லித் தருகின்றன; இருந்த போதிலும் வராகி வழிபாட்டுக்கு நமக்குத் தகுதி உண்டா என்பதை அவரவர் ஜாதகம் பார்த்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்;
வராகி உபாசனைக்குத் தான் ஜாதகப்படி தகுதி தேவை;வராகி வழிபாட்டிற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை;
தகுந்த மற்றும் நேர்மையான குருவைத் தேடிக் கண்டுபிடித்து வராகி வழிபாட்டைத் துவக்கவும்;
வாழ்க அறமுடன்,வளர்க அருளுடன்!!
ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஒம் வராஹியே போற்றி! போற்றி!! போற்றி!!!

Crorepathy in தேய்பிறை அஷ்டமி


ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழிபாடு!!!
நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;
பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.
நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8.சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
29.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
30.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
31.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.
.
அடுத்த தேய்பிறை அஷ்டமி :7/8/2015 வெள்ளி

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

ஓம்சிவசிவஓம்





பஞ்சாட்சரம் எனப்படும் மந்திரமான

 ஓம்நமச்சிவாய உலகத்தில் 

மட்டுமல்ல;பிரபஞ்சத்தில் இருக்கும் 

அனைத்து உலகங்களிலுமே 

உயர்ந்த மந்திரம் ஆகும்.எந்த ஒரு 

சிவாலயத்துக்குச் சென்றாலும்,ஓம் 

நமச்சிவாய என்று ஒன்பது முறை 

ஜபிக்கலாம்;அதற்கும் மேலாக 

தினமும் ஜபித்து வந்தால்,சில 

வாரங்களுக்குப் பிறகு அவ்வாறு 

ஜபித்தவர் துறவுமனப்பான்மையை 

அடைந்துவிடுவார்;சில மாதங்கள் 

வரை தொடர்ந்து ஓம்நமச்சிவாய 

ஜபித்து வந்தால் அவரால் வீட்டில் 

வாழ முடியாத மனநிலை 

உருவாகிவிடும்.இது தொடர்பாக 

யார் வேண்டுமானாலும் ஆன்மீக 

ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.


குடும்பக் கடமைகளை 

நிறவேற்றிக்கொண்டே,சிவ அருள் 

கிடைப்பதற்காக நமது ஆன்மீக 

குரு,ருத்ராட்சத்துறவி மிஸ்டிக் 

செல்வம் ஐயா அவர்கள் நமக்கு 

கண்டுபிடித்துக் கொடுத்த சிவ 

மந்திரம் ஓம்சிவசிவஓம் 

ஆகும்.எல்லா கோவில்களின் 

நுழைவு வாயில்களிலும் சிவசிவ 

என்று எழுதியிருப்பதை பார்த்து 

வருகிறோம்.ஒருவர் தினமும் 108 

முறை சிவசிவ என்று ஜபித்து 

வந்தாலும்,சில வாரங்களில் அவர் 

துறவு மனப்பான்மையை 

எட்டிவிடுவார்;சில மாதங்கள் 

வரையிலும் ஒரு நாள் விடாமல் 

தினமும் 108 முறை வீதம் சிவசிவ 

என்று ஜபித்து வந்தால்,அவர் தனது 

அனைத்து பந்தபாசங்களில் 

இருந்தும் விலகிச் சென்று 

விடுவார்;மனிதர்கள் வாழும் நகர/

கிராமப் பகுதியில் இருக்க 

அவருக்குப் பிடிக்காமல் 

போய்விடும்;ஒரு வருடத்துக்கும் 

மேலாக ஒருவர் தினமும் 108 முறை 

சிவசிவ என்று ஜபித்தால்,அவர் 

துறவியாகிவிடுவார். ஆனால்,அவர் 

துறவியானாலும்,அவரதுபிறந்த 

ஜாதகத்தில் அமைந்திருக்கும் 

நவக்கிரகங்கள் அவரை அவரது 

கர்மங்களை நோக்கி இழுக்கவே 

செய்யும்.அப்போது அவர் காமம் 

சார்ந்த தவறுகள் செய்யத் 

துவங்கிவிடுவார்; இந்த சூழ்நிலை 

ஆண்,பெண் என அனைவருக்கும் 

பொருந்தும்.


ஓம்நமச்சிவாய மந்திரத்திலிருந்து 

சுமார் 20000 சிவ மந்திரங்களை 

நமது முன்னோர்களாகிய சித்தர்கள் 

கண்டறிந்துள்ளார்கள்.அவைகளில் 

பல சிவ மந்திரங்களை ஜபிக்கும் 

தகுதி நமக்கு கிடையாது;சில சிவ 

மந்திரங்கள் தொடர்ந்து மூன்று 

பிறவிகளாக பிரம்மச்சாரியாக 

இருந்தால் மட்டுமே ஜபிக்க 

வேண்டும்.அந்த மந்திரத்தில் 

இருக்கும் வார்த்தைகள் இவைதான் 

என்று அறியும் ஞானம் கூட 

(தற்காலத்தில்) நம்மில் பலருக்குக் 

கிடையாது.


“ ஓம்நமச்சிவாய மந்திரத்தை 

தினமும் ஒன்பது முறை யார் 

வேண்டுமானாலும் 

ஜபிக்கலாம்;அதற்கும் மேலே 

ஜபிக்க வேண்டும் எனில்,தகுந்த 

சிவாச்சாரியாரிடம் சிவ தீட்சை 

பெற வேண்டும்;

சிவ தீட்சை பெற்றப்பின்னர், 

அதற்குரிய விதிமுறைகளை 

கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” 

என்று நமக்கு அறிவுறுத்தக்கூடிய 

துறவிகளோ,மகான்களோ,ஆன்மீக 

வழிகாட்டிகளோ இல்லை!!


பூமி விண்வெளியில் ரவி 

எனப்படும் 


சூரியனை சுற்றி வருகிறது;ஒரு 

முறை ரவியைச் சுற்றி வர சுமார் 

ஒரு வருடம் ஆகிறது.அப்படி சுற்றி 

வருவதோடு,தன்னைத் தானே சுற்றி 

வருகிறது;தன்னைத் தானே பூமி 

சுற்றிவருவதால் விண்வெளியில் 


மிகப் பிரம்மாண்டமாக ஓம் என்ற 

ஒலி உண்டாகிறது.சிவ சிவ என்ற 

மந்திரத்தின் முன்னும் பின்னும் ஓம் 

என்னும் மந்திரத்தை சேர்க்கும் 

போது அது குடும்பஸ்தர்களுக்கு 

ஏற்ற மந்திரமாக 

மாறிவிடுகிறது.பூமியின் 

இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்து 

இறை அனுபவம் பெறக்கூடிய 

சூழ்நிலையும் 

உருவாகிவிடுகிறது.எனவே தான் 

ஓம்சிவசிவஓம் ஜபிக்க 

வலியுறுத்துகிறோம்;

நமது குடும்பக் கடமைகளை 

நிறைவேற்றிக்கொண்டே நாம் சிவ 

சிந்தனையில் ஈடுபடவும்,நாம் 

இறையருளைப் பெறவும் ஏற்ற 

மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும். 

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு 


முறைப்படி தீட்சை கூட வாங்க 

வேண்டிய அவசியம் இல்லை; 


ஆனால், ஓம்நமச்சிவாய 

மந்திரத்தை விடவும் விரைவாக 

உயிரூட்டம் பெறும் மந்திரம் 

ஓம்சிவசிவஓம் ஆகும்.

நாம் நமது ஜாதகப்படி எந்த 

யோகத்தில் பிறந்திருந்தாலும் 

சரி,அல்லது எந்த தோஷத்தில் 

பிறந்திருந்தாலும் சரி,அவை 

அனைத்தையும் நீக்கி நம்மை 

நிம்மதியாகவும் செல்வச் 

செழிப்போடும் வாழ வைக்கும் 

மந்திர ஜபம் ஓம்சிவசிவஓம் ஆகும்.

ஒரே இடம்,ஒரே நேரம் என்ற 

கொள்கை அடிப்படையில் தினமும் 

ஓம்சிவசிவஓம் ஜபிக்க நம்மை 

பழகிக் கொள்ள வேண்டும்.(நமது 

வீட்டில் எந்த இடத்தில் முதல் 

நாளன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க 

ஆரம்பிக்கிறோமோ, அதே இடத்தில் 

மட்டும் தினமும் ஜபித்து வர 

வேண்டும்;தினமும் எந்த நேரத்தில் 

ஓம்சிவசிவஓம் ஜபித்து 

வந்தோமோ,அந்த 

நேரத்தில்=முடிந்த வரையிலும் 

ஜபித்து வருவதால் அற்புதமான 

பலன்களை உணரலாம்)

இப்படிப்பழக்கப்படுத்துவதன் 

மூலமாக ஓம்சிவசிவஓம் 

மந்திரஜபத்தில் சக்தியை ஓரிரு 

மாதங்களில் உணரத் 

துவங்கலாம்.ஓம்சிவசிவஓம் 

ஜபிக்கஆரம்பித்த முதல் 15 

நாட்களுக்கு சிலருக்கு ஒரு மாதம் 

வரையிலும் மனக்குழப்பம் வரத் 

தான் செய்யும்.ஏனெனில்,நமது 

விதியை நாமே ஓம்சிவசிவஓம் 

ஜபிக்கத் துவங்குவதன் மூலமாக 

மாற்றத் 

துவங்குகிறோம்;அதனால்,நாம் 

ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிய 

ஒவ்வொரு நாளுமே ஜபிக்கும் 

நேரத்தில் தேவையில்லாத 

சிந்தனைகள்,காட்சிகள்,மனக்குழப்ப

ங்கள் வரத் தான் செய்யும்.மன 

உறுதி உள்ளவர்களுக்கு 16 வது 

நாளிலிருந்தும், மன உறுதி 

குறைவாக இருப்பவர்களுக்கு 31 

வது நாளிலிருந்து 

மனக்குழப்பங்கள் 

முழுமையாக விலகிவிடும்.

ஆறு மாதங்கள் 

வரையில்(சிலருக்கு 

ஒன்பது மாதங்கள் வரையிலும்) 

தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து 

வந்தால்,அவர்கள் வாழ்ந்து வரும் 

இடத்தில் அவர்களே சக்திவாய்ந்த 

மனிதராக இருப்பார்;அவர் 

சிடுமூஞ்சியாக 

இருந்தால்,கலகலப்பானவராக 

மாறிவிடுவார்; எப்போதும் 

கவலைப்படுபவராக 

இருந்தால்,அந்த கவலைகளை 

ஒழித்துக்கட்டும் வல்லமையை 

அடைந்துவிடுவார்;நிறைய 

கடன்களோடு இருந்தால்,அந்த 

கடன்கள் தீர வழி கிடைக்கத் 

துவங்கும்;பலவித அல்லது ஓரிரு 

கெட்ட பழக்கங்களுக்கு 

அடிமையாகி இருந்தால் அத்தனை 

பழக்கங்களும் அவரை விட்டு 

விலகிச்செல்லத் துவங்கிவிடும்.

ஒரு வருடம் வரை தினமும் 

ஓம்சிவசிவஓம் ஜபித்து 

முடித்திருந்தால்,நமது உடலுக்குள் 

இருக்கும் ஒவ்வொரு நாடி மையம் 

மற்றும் வர்மமையங்களிலும் நமது 

ஜப எண்ணிக்கை ஒருமுறை 

பதிவாகியிருக்கும்.நாமே சிவ 

அம்சமான 

ருத்ரனாகிவிடுவோம்;ஒரு நாளுக்கு 

ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து 

பத்து ஆண்டுகளுக்கு தினமும் 

ஓம்சிவசிவஓம் 

ஜபித்துவந்தால்,நமது உடலில் 

இருக்கும் ஒவ்வொரு சக்தி 

மையத்திலும்(நாடிகள் மற்றும் 

வர்மப் புள்ளிகள்) நூறுமுறை 

ஓம்சிவசிவஓம் மந்திர ஆற்றல் 

நிரம்பியிருக்கும்.ஆறு அல்லது 

ஏழாம் ஆண்டிலிருந்தே நாம் 

,நம்மைச் சுற்றியிருப்பவர்களின் 

எண்ண ஓட்டங்களைத் தாமாகவே 

அறியும் குணத்தைப் 

பெற்றுவிடுவோம்;நமக்கு சில சிவ 

தரிசனங்கள் கிடைத்திருக்கும்; 

ஜோதிட பலன்கள்,நவக்கிரக 

பாதிப்புகள்,பஞ்சபூத பாதிப்புகள் 

என்று எதுவும் நம்மை 

அண்டாது;நாமே சித்த சக்தியாக 

உருமாறிவிடுவோம்; அப்படி 

மாறினாலும்,நாம் நமது குடும்ப 

மற்றும் சொந்தக் கடமைகளை 

கைவிடமாட்டோம்;

ஜாங்கிரி என்று சொன்னால் நாவில் 

இனிப்புச் சுவையை அறிய 

முடியாது;இவ்வளவு பதிவுகளை 

வாசித்தால் மட்டும் ஓம்சிவசிவஓம் 

மந்திரஜபத்தின் சக்தியை அறிய 

முடியாது;(இந்த 

புகைப்படங்களுக்குள் 

ஒளிந்திருக்கும் சூட்சும சக்திகளை 

அறியத் துவங்கியிருப்போம்!!!)

ஓம்சிவசிவஓம்

சனி, 18 ஏப்ரல், 2015

27 stars காயத்ரி மந்திரங்கள்

27 stars காயத்ரி மந்திரங்கள் க்கான பட முடிவு



27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்