வியாழன், 1 மே, 2014

பூத உடலுடன் 108 வைணவ திவ்ய தேசங்கள



real estate & broker தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் வெற்றி பெற கும்பிட வேண்டிய தெய்வங்கள் .
108 வைணவ திவ்ய தேசங்களில் மானிடர்கள் பூத உடலுடன் காண முடியாத தலங்கள் 2 அவை 
1,திருப்பாற்கடல்
2.திருப்பரமபதம்
இப்பொழுது
திருப்பரமபதம் பற்றி காண்போம்
பரமபதம் தான் பெருமாள் எப்பொழுதும் நித்தியவாசம் செய்கிறார் புண்ணிய தலம்.
இங்கு தான் ஜீவாத்மாக்கள் பகவானுக்கு சதாசர்வ காலமும் கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பார்கள்.
திருப்பாற்கடலை தரிசனம் செய்தவர்களுக்கெல்லாம் நிச்சயம் பரம்பதத்தில் இடம் உண்டு.
பெருமாள் மூலவரும் அவரே உத்ஸ்வராக அவரே வீற்றிருத்த திருக்கோலத்தில் தெற்கே தரிசனம் கொடுத்துக் கொண்டுருப்பார். தாயார் பெரிய பிராட்டியார்.
இத்த இடத்தில் நுழைத்தவர்கள் மறுபிறவி கிடையாது.
பரமபதமே முத்திப் பதம் ஆகும்.
அடியார்களை திருமலே
பரமபத அழைத்து சென்றும் வாயிலில் அவரே வரவேற்று அங்கே அடியார்களை நித்திய வாசம் செய்ய வைக்கிறார்.
இங்கும் ஸ்ரீமந் நாரயாணன்
சங்கு சக்கர கதையுடம் காயாம்பூ இதழ் போன்ற வண்ணத்தில் பல கோடி சூரிய ஒளி விளங்கச் சேவை சாதிக்கிறார். தாமரை மலர் போன்ற கண்களும், தோள் வளை,மாலை, காலில் சதங்கையுடசன் திருமேனியில் சந்தனமும் விளங்க இருப்பவர். பட்டாடை புனைந்து தேவியார்களுடன் நித்தியர்களும் முத்தர்கள் என முக்காலமும் தொழிதவாறு இருக்க திகழ்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக