புதன், 26 ஆகஸ்ட், 2015

குறைகளை நிவர்த்தி செய்யும் அற்புதமான ஸ்தலங்கள்




குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள்திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.

==================================================கோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.
================================ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின் குருவாக இருப்பவர் காலபைரவர்!!!

காலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன. அதில் ஒன்று, ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்டமிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
==========================================

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.

===========================================

திண்டுக்கல் மாவட்டம்,தாடிக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது. இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமணசம்மந்தம் கிடைக்கும்.

இங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை, கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் என்பது ஐதீகம.
==================================================
நவ பிருந்தாவன் - ஒரு முறை சென்று வாருங்கள். தினமும், நவ பிருந்தாவன் படத்திற்கு முன், நெய் தீபம் ஏற்றுங்கள்.. பொருளாதார ஏற்றம், உங்கள் வாழ்வில் நிச்சயம் உண்டு...

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பஞ்சகவ்ய ரகசியங்கள்



பஞ்சகவ்ய ரகசியங்கள் (share) செய்யுங்கள்)

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய 

ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. 

குணமுடையன இவற்றின் கலவை சிறந்த 

சத்துணவு . கோசலமும்(கோமியம்) , 

கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் 

குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் 

கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என 

பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 

மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 

4) நெய் 5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து 

தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து 

சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை 

பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், 

வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் 

பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு 

விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். 

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் 

பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல 

மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது 

கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி

பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி

பசும்நெய்:மோட்சம்

கோசலம் :தீட்டு நீக்கம்

கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் 

நிறையும்.கருவறைகளில் பிரதிஷ்டை 

செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் 

குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான 

கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை 

எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் 

காரணமாககருவறைகள் , சிலைகள், 

இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் 

கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் 

வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை 

அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு 

அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் 

பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக 

மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் 

சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த 

சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் 

சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் 

அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு 

அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல்

அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் 

தன்மை கொண்டவை, என்றென்றும் 

புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை 

முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று 

விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு 

சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் 

உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு 

தேவர்கள் வாசம் செய்கின்றனர். பசுவின் 

பால்,தயிர், நெய். கோமயம், சாணம் னும் 

இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் 

எனப்படும்

இது இயற்கை வேளாண்மையில் மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் 

பொருள்(உரம்) ஆகும்.

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில 

அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு

பசுந்தயிர் :2 அளவு

பசும்நெய் அளவு

கோசலம் :1 அளவு

கோமயம் : 1 அளவு

தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் 

முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது .

பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட 

பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் 

அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் 

தொடர்வு உண்டு.

பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும்

நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,

கருநிறப் பசுவிடமிறந்து நெயும் ,

செந்நிற பசுவிடமிருந்து கோசலமும்,

தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க 

வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் 

பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில் 

"ஆனைந்த "என்பர் .

பசும் பாலில் சந்திரனும் ,

பசுவின் தயிரில் வாயு பகவானும்,

கோமயத்தில் வருண பகவானும்,

பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,

நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .