ஞாயிறு, 11 ஜனவரி, 2015

முருகனின் 16 கோலங்கள்




முருகனின் 16 வகை கோலங்கள்

1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் 


நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். 

திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் 

மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்' 

திருக்கோலமாகும். 
2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல 

காரியங்களும் சித்தியாகும். பழனிமலை 

ஆண்டவர் திருவடிவம் இது. 


3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் 


மங்களகரமான வாழ்வு கிடைக்கும். 

சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் 

கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் 

உள்ளது.


4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் 


பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் 

பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை 

மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் 

கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.


5. கஜவாகனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் 


விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் 

நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய 

இடங்களில் யானை மீதிருக்கும் இவரது 

திருவுருவம் உள்ளது.


6.சரவணபவர்: தன்னை வழிபடும் 


அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, 

சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை 

அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய 

இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.


7. கார்த்திகேயர்: இவரை வழிபட்டால் சகல 


சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை 

நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது 

விஷேசமான பலன்களைத் தரும். 

கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் 

கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் 

கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் 

உள்ளது.

8. குமாரசாமி: இவரை வழிபட்டால் ஆணவம் 

அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் 

இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் 

உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் 

இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.


9. சண்முகர்: இவரை வழிபட்டால் சிவசக்தியை 


வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் 

உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் 

திருவடிவமாகும்.



10. தாரகாரி: `தாரகாசுரன்' என்னும் அசுரனை 

அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு 

நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் 

இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் 

இது. 

விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் 

தாரகாரி இருக்கிறார்.


11. சேனானி: இவரை வழிபட்டால் பகை 


அழியும். 

போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை 

நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி 

திருவுருவம் இருக்கிறது.


12. பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா 


வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். 

சகலவித கலையறிவும் அதிகரிக்கும். 

கல்வியில் 

தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள 

குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி 

ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா 

திருக்கோலம் 

உள்ளது.


13. வள்ளிகல்யாணசுந்தரர்: இவரை வழிபட்டால் 


திருமணத்தடைகள் விரைவில் அகலும், 

கன்னிப் 

பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் 

கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் 

தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.


14. பாலசுவாமி: இவர், உடல் ஊனங்களையும், 


குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை 

வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். 

திருச்செந்தூர், திருக்கண்டிïர், ஆண்டாள் கும்பம் 

கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் 

இருக்கிறது.


15. சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் 


துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். 

திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி 

ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.



16. சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் 

அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற 

அமையும் திருவடிவம். தன்னை 

வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு 

அளிப்பவர் இவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக