ஞாயிறு, 7 டிசம்பர், 2014

இதுவும் மதமாற்றம் தான்

இதுவும் மதமாற்றம் தான் 

 Kumar Kandasamy என்பவர் சொன்னது 

அச்சரப்பாக்கத்தில் நான் பணியாற்றிய பொழுது வழக்கமாக எனக்கு வரும் கார் டிரைவர் 
வரவில்லை. மறுநாள் தன் குழந்தை படிக்கும் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வரமுடியவில்லை என்று கூறினார். விசாரித்த போது அவர் கூறிய
தகவல் அதிர்ச்சி ரகம்.


அச்சரப்பாக்கத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி பஸ்களில் காலையும் மாலையும் சென்று வருகின்றனர். புதிய சேர்க்கை முடிந்ததும் LKG UKG குழந்தைகள் மொத்தமாக தனி பஸ்ஸில் மாலை வீட்டுக்கு பள்ளி முடிந்ததும் அனுப்பபடுவார்கள். அவர்களுடன் ஒரு
கன்னியாஸ்திரியும் பயணிப்பார். பஸ் கொஞ்ச தூரம் சென்றவுடன் மக்கர் செய்து நின்று
விடும். பஸ் டிரைவர் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தும் பஸ் நகராது. பஸ்ஸில் பெரும்பாலான குழந்தைகள் இந்து குழந்தைகள். உடனே கன்னியாஸ்திரி இந்து குழந்தைகளை பார்த்து உங்கள் கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் பஸ் கிளம்புகிறதா
பார்க்கலாம் என்று சொன்னவுடன் பிள்ளையாரையும் முருகனையும் பிரார்த்தனை செய்ய
பஸ் கிளம்பாது. 


இரண்டு மூன்று தடவைக்கு பிறகு அந்த கன்னியாஸ்திரி ஏசுவை
பிரார்த்தனை செய்ய சொல்வார். உடனே பஸ் கிளம்பிவிடும்.. குழந்தைகள் கை தட்டி ஆரவாரம் செய்ய இனிமேல் நீங்கள் ஏசுவையே கும்பிடுங்கள் ஏனெனில் அவர் தான் உண்மை கடவுள் என்பார். குழந்தைகளுக்கு தெரியுமா இது பஸ் டிரைவரும்
கன்னியாஸ்திரியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று.


 குழந்தைகள் ஏசு வழிபாட்டை
வீட்டிலும் தொடர பெற்றவர்கள் பேராட்டத்தில் இறங்க போலீஸ் தலையிட்டு பள்ளி
நிர்வாகம் கண்டிக்கப்பட்டது.
இளம் பிஞ்சுகள் மனதில் எப்படி நஞ்சை விதைக்கிறார்கள் என்று பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக