Om Namsivaaya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Om Namsivaaya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2015

திருவாதிரை விரத முறை





***திருவாதிரை விரதத்தின் பெருமை, அனுஷ்டிக்கும் முறை, ***ஆனந்த நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள் :

இதற்கு முந்தைய பதிவில் மார்கழி மாதத்தின் பெருமையையும், பிறப்பிலியாகிய சிவபெருமான் எவ்வாறு திருவாதிரை நட்சத்திரத்திட்கு உரியவராகி திருவாதிரையான் ஆனார் என்பதையும் பார்த்தோம்., படிக்காதவர்கள் படிக்க!!.. இன்றைய பதிவில் நடராஜப் பெருமானின் ஏனைய அபிசேக தினங்களையும் , திருவாதிரையில் அருள் பெற்ற பதஞ்சலி, வியாக்ரக பாதர் ஆகியோரது வரலாற்றையும் பார்ப்போம்.

**ஸ்ரீ நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள்.

எமது ஒருவருடமே தேவர்களின் ஒருநாளாகும். எமக்கு எவ்வாறு சிவாலயங்களில் 6 கால பூஜை ஆகமங்களில் விதிக்கப்பட்டதோ அவ்வாறே தேவர்களும் சிவபெருமானை 6 காலங்களும் பூஜித்து அருள் பெறுகின்றனர். ((இன்று நாம் தினமும் ஒருகாலமாமது சிவபெருமானை வழிபடுவதை மறந்துவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது)). அந்த 6 காலங்களுமே ஆனந்த நடராஜ மூர்த்தியின் 6 அபிடேக தினங்களாகும். இந்தத் தினம் தவிர வேறு எந்த நாட்களிலும் நடராஜருக்கு அபிடேகம் நடப்பதே இல்லை. அவையாவன…

1, ***மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்,- தேவர்களின் அதிகாலை பூஜை, (தனுர்மாத பூஜை),- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்

2, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் காலை சந்தி பூஜை,-அபிசேகம் மட்டும்.

3, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் – தேவர்களின் உச்சிக்கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

4, ***ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் – தேவர்களின் சாயங்கால பூஜை.- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்.

5, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் இரண்டாம் கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

6, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி – தேவர்களின் அர்த்தஜாம பூஜை.- அபிசேகம் மட்டும்.

***திருவாதிரை விரதித்தின் பெருமை***

ஸ்கந்த புராணத்தில் ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை, முழுப் பௌர்ணமி கூடிய தினத்தன்று தான் நடராஜப்பெருமான் மாமுனி பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் தனது ஆனந்த தாண்டவ திருக்கோலத்தை தில்லையில் காட்டியதாக வரலாறு., வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோர் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

**மாமுனி பதஞ்சலி :-

பதஞ்சலி முனிவர் பூர்வ ஜன்மத்தில் வைகுந்தத்தில் ஆதிசேடனாக இருந்து திருமாலை தாங்கியவர். பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொள்ளும் போது ஒருமுறை ஆதி சேடன் என்கிற நாகம் திருமாலின் பாரம் கூடிகொண்டுபோவதாக உணர்ந்தார். இதற்கான காரணத்தையும் திருமாலிடம் வினாவினார். அதற்கு திருமால் கூறினார் தாம் யோக நித்திரையில் இருந்தபடி பரமேஸ்வரரின் திருநடனத்தை மீட்டு ரசித்துக்கொண்டிருப்பதாகவும், அதனால் தன் உடலில் சக்தி பெருக, உடல் நிறை கூடிக்கொண்டு சென்றது என்று காரணம் கூறினார்.-( இதனால் தான் தில்லையில் ஆனந்த நடராஜ மூர்த்தியை நோக்கியவாறே திருமால் பள்ளிகொண்டவராக, மூலஸ்தானதிட்கு எதிரே தனி சன்னதியுடன் வேறெந்த சிவாலயத்திலும் இல்லாதவகையில் இங்கு மட்டும் எழுந்தருளியுள்ளார் ).-

இதை கேள்வியுற்ற ஆதிசேடனிட்கு தாமும் அந்த திருநடனத்தை காணவேண்டுமென்று ஆவல் பெருக, அதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் இரந்தார். திருமாலும் அதற்கியைந்து பின்வருமாறு கூறலானார். பூலோகத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த சிதம்பரம் என்கின்ற தில்லை வனத்தில் வியாக்ரகபாதர் என்கின்ற புலிக்கால் முனிவர் சிவபெருமானின் திருநடனத்தை காண தவம் செய்வதாகவும், அவருடன் சேர்ந்து தவத்தை தில்லையில் தொடர்ந்தால் இலகுவில் ஆதிசேடனின் எண்ணம் நிறைவேறுமெனவும் கூறினார்.

அதன்படி அத்திரி மகரிஷி- அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக ஆதிசேடன் அவதரித்தார். அவருக்கு பதஞ்சலி என்ற பெயர் வைக்கப்பட்டது. பதஞ்சலி முனிவர், தன்னுடைய ஏழு நண்பர்களுடன் இணைந்து நந்திதேவரிடம் இருந்து இறைவழிபாட்டுடன் இணைந்த, மனம், வாக்கு, உடல் சுத்தம் என்னும் வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தேர்ந்தார். இவரே இன்று உலகம் முழுதும் அரிய பொக்கிசமாகபோற்றும் யோக கலையை உலகிற்கு இலகு வடிவில் யோக சூத்திரமாக அறிமுகப்படுத்தியவர்.

அதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல ஊர்களுக்கும் சென்றார். அதன் ஒரு பகுதியாக தன் பிறப்புக்கு காரணமான நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் காணும் விருப்பதின் அடிப்படையில் சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு நெடுங்காலம் தங்கி திருமூலட்டானர் என்னும் நாமத்துடன் விளங்கிய சுஜம்பு மூர்த்தியாகிய சிவலிங்க பெருமானை தரிசித்து தவமியற்றினார். நற்றவத்தின் பயனாக சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார் .

**மாமுனிவர் விஜாக்ரக பாதர்.

பதஞ்சலி முனிவருடன் தில்லையில் நடனம் கண்ட மற்ற முனிவர் வியாக்ரகபாத முனிவராவார். இதனால் தான் இவர்கள் இருவரின் திருவுருவங்கள் அனேகமாக நடராஜரிட்கு முன்னே ஸ்தாபிக்க பட்டிருக்கும். இவர் பதஞ்சலி முனிவரின் பிறப்பிற்கு முன்பிருந்தே தில்லை வனத்தில் தவமியற்றிக் கொண்டிருந்தவராவார். மத்யந்தின முனிவரது மகனே புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படுகிறார். தமது தந்தையைப் போலே சிவபெருமானை அர்ச்சித்து வழிபட ஆசைக்கொண்ட அவர், தினமும் தில்லை வனத்தில் இருந்த சிவலிங்கத்திற்கு அங்குள்ள வனத்தில் பூப்பறித்து வழிபட்டு வரலானார்.

அடர்ந்த காடு, வழ வழப்பான மரங்கள், பழுத்துக் கிடக்கும் பூக்கள், வண்டு தேன் எடுத்த மலர்கள்.... இவையெல்லாம் அவரது பூஜைக்கு இடையூறாய் இருக்க...அவர் வேறு யாரிடம் வேண்டுவார்!? சிவனாரிடமே வேண்டினார்.!! என்னவென்று!? " ஐயா... ஸ்வாமி.... எனக்கு புலிகளுக்கு இருப்பது போல கால்களைக் கொடு.... அந்த கால்களில் உள்ள நகங்கள் இடையூறின்றி மரமேறவும், நல்ல பூக்களைப் பறிக்கவும் எனக்கு அருள் புரிவாய்! மேலும் உடல் முழுவதும் கண்களை கொடு சிறந்த பூக்களைத் தேடித் பறித்து சிவபூஜை செய்ய. . உன் பூஜைக்கு இடையூறு அளிக்காதே! என்ன ஒரு அற்புதமான வேண்டுதல் பாருங்கள்.!! இவரும் பதஞ்சலி முனிவருடன் சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார்..

**திருவாதிரை விரதத்தினை அனுஷ்டிக்கும் முறை

பரமனிடம் பாற்கடலையே பெற்ற உபமன்யு முனிவரை வியாக்ர பாதர் மகனாக பெற்றது இவ்விரத மகிமையால்தான். விபுலர் என்னும் பிராம்மணர் இவ்விரத மகிமையால் பூத உடலுடன் திவ்ய வாகனத்தில் திருக்கயிலாயம் சென்று திரும்பி வந்தார், பின்னர் பலகாலம் பூவுலகில் இனிது வாழ்ந்து முக்தியும் பெற்றார். திருவாதிரையன்று எம்பெருமான் ஆனந்த நடமாடி களித்திருப்பதால் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் அவரை எளிதில் திருப்திபடுத்தலாம்.

ஸ்கந்த புராணத்தில் கூறியுள்ளபடி மார்கழிமாத திருவாதிரை அன்று காலை எழுந்து ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணரையும் அம்மை சிவானந்த வல்லியையும் ஆத்மார்த்தமாக வணங்கி உடல் சுத்தி செய்து, திருநீறந்து பஞ்சாக்ஷர மந்திரம் ஓதிக் கொண்டு சிவாலயம் சென்று எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அமுது படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு, நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து அந்த எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருந்து, ”பொன்னம்பலம் நீடூழி வாழ்க”, சித் சபேசா, ஆனந்த தாண்டவ நடராஜா, சிற்றம்பலா, அம்பலவாணா என்று பல் வேறு நாமங்களால் போற்றி வணங்கி மறு நாள் காலை எழுந்து முக்கண் முதல்வரை வணங்கி அவரின் அடியவர்களுக்கு அமுது செய்வித்து, பின் தானும் பிரசாதம் புசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இம்முறை மார்கழி திருவாதிரை 5/01/2015.
கண்களிரண்டும் பதிகம் முழுதும் கேட்க இங்கே அழுத்துக https://www.youtube.com/watch?v=u_3GmFo4ePw&index=41&list=PL3DBDD6B5163DFC10

ஈழத்து சிதம்பரம் திருவெம்பாவை முழுதும் கேட்க... https://www.youtube.com/watch?v=6Ve4sIOXlME

”பொன்னம்பலம் நீடூழி வாழ்க”.

வியாழன், 25 செப்டம்பர், 2014

தஞ்சை கோயில் சிறப்புகள்


தஞ்சை பெரிய கோயில் சிறப்புகள்
பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !
இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது ????
என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்..
இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.
அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
● பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர்.
இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.
ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும்.
கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும்.
இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும்.
இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம்.
இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர்.
சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.
இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம்.
கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம்.
கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.
பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள்.
இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது.
ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
● பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை.
சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம்.
கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது.
இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது.
சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது.
விமானம் 13 தட்டுகளைக் கொண்டது.
முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.
பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன.
இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது.
தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள்.
இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.
● சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன.
மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது.
ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன.
சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன.
இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன.
மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன.
மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது.
இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது.
விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது.
முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன.
முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது.
சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன.
தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன.
இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன.
செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு.
இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!
உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும்.
ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று.
அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும்.
தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார்.
மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
....நன்றி
தமிழும் சித்தர்களும் Thamil.Siththars